புத்தளம் மாவட்ட மக்களுக்காகவே 20க்கு ஆதரவளித்தேன்: அலி சப்ரி

புத்தளம் மாவட்ட மக்களுக்காகவே 20க்கு ஆதரவளித்தேன்: அலி சப்ரி

என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த புத்தளம் மாவட்ட மக்களின் உணர்வுகளை நன்கு அறிந்துகொண்டவன் என்ற வகையில், பலருடன் ஆலோசித்துதான் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்தேன் என முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம் தெரிவித்தார்.

"எனக்கு பணம், பதவி முக்கியமல்ல. என்னை நம்பி வாக்களித்து எம்.பியாக்கிய புத்தளம் மக்களின் உணர்வுகள்தான் முக்கியம்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

புத்தளம் மாவட்ட மக்கள் வேறு எந்த மாவட்ட அரசியலையும் உதாரணமாக எடுக்கத் தேவையில்லை. எமது அபிவிருத்தி, எமது உரிமை, எமது எதிர்பார்ப்பு. இதுவே எனதும் முடிவுமாகும் என அலி சப்ரி ரஹீம் கூறினார்.

அரசின் பூரண ஒத்துழைப்போடு புத்தளம் தொகுதி மக்களின் அனைத்து எதிர்பார்ப்புக்களும் கட்டம் கட்டமாக நிறைவேற்றப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

-ரசீன் ரஸ்மின்-