ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தினை மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தினை மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை

நூருல் ஹுதா உமர்

ஒலுவில் துறைமுகத்திலுள்ள மீன்பிடி துறைமுகத்தினை மீண்டும் செயற்படுத்த  கடற்றொழில் நீரியல் வள அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் முதற் கட்டமாக மீன் பதனிடும் தொழில் கூடத்தினை மீனவ சமூகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டவுள்ளது.

நாளை (22) புதன்கிழமை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொள்ளவுள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த துறைமுகத்திற்கு  இன்று வரை எந்தவொரு கப்பலும் நுழையவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கப்பல் ஒன்றுகூட நுழையாத ஒலுவில் துறைமுகம்