பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் குச்சவெளிக்கு விஜயம்

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் குச்சவெளிக்கு விஜயம்

குச்சவெளி பிரதேச சபைக்கு வருகை தந்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை)  உமர் பாரூக் பர்கிக்கு சபை தலைவர் ஏ.முபாறக்கினால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த விஜயத்தின் போது, உயர்ஸ்தானிகர் மற்றும் உள்ளூர் அங்கத்தவர்களுக்கு இடையில் கல்வி, சுகாதாரம், கலை மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்திகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.

குச்சவெளி பிரதேசம் சுனாமி அனர்த்தத்தினாலும் பின்னர் கொவிட் 19 இன் கடுமையான தாக்கத்தினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டு இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பகுதியில் குடிநீர் பிரச்னை பெரும் பிரச்னையாக உள்ளது. இவ்விஜயத்தின் போது குச்சவெளி ஜெயா நகரில் பாகிஸ்தான் அரசின் ஆதரவுடன்  நிர்மாணிக்கப்பட்ட பொதுக் கிணறும் திறந்து வைக்கப்பட்டது.