பிரபல பாடகி யொஹானிக்கு அரசாங்கத்தினால் காணி அன்பளிப்பு

பிரபல பாடகி யொஹானிக்கு அரசாங்கத்தினால் காணி அன்பளிப்பு

சர்வதேச ரீதியாக இலங்கைக்குப் புகழ் சேர்த்த பிரபல பாடகி யொஹானி டி சில்வாவினை பாராட்டும் நோக்கில் அரசாங்கத்தினால் காணித் துண்டொன்று வழங்கப்பட்டவுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான பத்தரமுல்ல, ரொபர்ட் குணவர்த்தன வீதியில் அமைந்துள்ள, 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றெடுத்த இலங்கை கிரிக்கட் குழுவுக்கு 99 வருடகால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள  காணித்துண்டுகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள 9.68 பேர்ச்சர்ஸ் காணித்துண்டொன்றை யொஹானி டி சில்வாவிற்கு அரசாங்கத்தால் பரிசாக வழங்கப்பட்டவுள்ளது.

பாடகி யோகினியை  பாராட்ட வேண்டுமென பல்வேறு தரப்பினரும், பாராளுமன்றத்திலும் யோசனை தெரிவிக்கப்பட்டதற்கமைய அமைச்சரவையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புத்தசாசன, சமய அலுவல்கள் மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.