இந்தோனேசிய தூதுவராலயத்தினால் ஹம்பாந்தோட்டையில் உலருணவுப் பொருட்கள் அன்பளிப்பு

இந்தோனேசிய தூதுவராலயத்தினால் ஹம்பாந்தோட்டையில் உலருணவுப் பொருட்கள் அன்பளிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் காரணமாக பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு உலருணவுப் பொருட்களுக்கு வழங்கும் திட்டமொன்றினை கொழும்பிலுள்ள இந்தோனேசிய தூதுவராலயம் அண்மையில் முன்னெடுத்திருந்தது.

இலங்கை - இந்தோனேசிய நண்பர்கள் சங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டம், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடம்பெற்றது. இம்மாவட்டத்திலுள்ள அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய 160 குடும்பங்களுக்கு இதன்போது உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள இந்தோனேசிய சமூகத்தினாரால் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள 431 குடும்பங்களுக்கு தேவையான உலருணவுப் பொதிகள் அன்பளிப்புச் செய்வதற்கான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இதில் 160 மாத்திரமே தற்போது விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனையவை பொருளாதா நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி மக்களுக்கு விரைவில் கையளிக்கப்படவுள்ளது.