நாட்டிலுள்ள பள்ளிகளின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

நாட்டிலுள்ள பள்ளிகளின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

ஏ.ஆர்.ஏ.பரீல்

நாட்­டி­லுள்ள அனைத்துப் பள்­ளி­வா­சல்கள் மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் கீழுள்ள நிறு­வ­னங்கள் என்­ப­ன­வற்றின் சொத்­துகள் உள்­ளிட்ட விப­ரங்­களை வழங்­கு­மாறு புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்க முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பா­ளரைக் கோரி­யுள்ளார்.

பள்­ளி­வா­சல்கள் மற்றும் நிறு­வ­னங்­களின் அசையும், அசையா சொத்­துக்கள், உள்­ளிட்ட விப­ரங்கள் தாமத­மின்றி வழங்­கு­மாறு கோரப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை பள்­ளி­வா­சல்கள் மாத்­தி­ர­மல்ல நாட்­டி­லுள்ள அனைத்து மதஸ்­த­லங்­களின் சொத்­துகள் மற்றும் தக­வல்­களைப் பெற்றுக் கொள்ள அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தெ­னவும் மகா­நா­யக்­கர்கள் மற்றும் ஏனைய மதத்­த­லை­வர்­களின் ஒத்­து­ழைப்­புடன் இந் ­ந­ட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­படும் என்றும் அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்க தெரி­வித்­துள்ளார்.

பதிவு செய்­யப்­பட்­டவை மற்றும் பதிவு செய்­யப்­ப­டா­தவை என்ற வகையில் இரு வேறு பிரி­வு­களில் தக­வல்கள் சேக­ரிக்­கப்­பட்டு தற்­போது அறிக்கை தயா­ரிக்­கப்­பட்டு வரு­கி­றது. இது தொடர்பில் தற்­போது அரை­வாசி பணி­ பூர்த்­தி­யா­கி­யுள்­ளது என பணிப்­பாளர் இஸட் ஏ.ஏம்.பைசல் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

ஆரம்­பக்­கட்­ட­மாக பள்­ளி­வா­சல்கள், அதன் சொத்­துகள் தொடர்­பான விப­ரங்கள் சேக­ரிக்­கப்­பட்டு அறிக்கை தயா­ரிக்­கப்­பட்டு வரு­கி­றது. அடுத்த கட்­ட­மாக திணைக்­க­ளத்தின் கீழுள்ள ஏனைய நிறு­வ­னங்கள் தொடர்பில் கவனம் செலுத்­தப்­படும் என்றும் அவர் கூறினார்.

பள்­ளி­வா­சல்­களின் சொத்­துகள் தொடர்­பான விப­ரங்­களைத் திரட்­டு­வ­தற்கு வக்பு சபை பாரிய ஒத்­து­ழைப்­பு­களை வழங்கி வரு­வ­தா­கவும் இதனால் இந்­தப்­பணி இல­கு­வாக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்த அவர் வக்பு சபைக்கு தனது நன்­றி­களை சமர்ப்­பிப்­ப­தா­கவும் கூறினார்.