பூகோள அவசர நிலையால் பாதிக்கப்படும் ஆசிய பசுபிக் பிராந்திய இளம் தலைமுறை

பூகோள அவசர நிலையால் பாதிக்கப்படும் ஆசிய பசுபிக் பிராந்திய இளம் தலைமுறை

ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் 63 சதவீதமான மக்கள் காலநிலை மாற்றத்தை பூகோளத்தின் அவசர நிலையாக இனம் கண்டுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இப்பிராந்தியத்திலுள்ள இளைஞர் யுவதிகளே இதனால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பில் மக்கள் போதியளவில் விழிப்பாக இல்லையென்று இளம் தலைமுறையினர் கவலை கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆசிய பசுபிக் பிராந்திய இளைஞர்கள் போரம் அமைச்சர்கள் மற்றும் சூழலியல் அதிகாரிகளுக்கான போரமாக நேற்று (01) ஐ.நா அலுவலக முன்றலில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் "ஆசிய பசுபிக் பிராந்தியமானது அதன் சுற்றாடல் பிரச்சினைகளைக் கையாள இளைஞர்களின் பங்களிப்பை அவசியமாகவும் அவசரமாக வேண்டி நிற்பதாவும் தெரிவித்த அவர் அந்த வகையில் இந்த போரம் ஒரு மைல் கல்லாக அமைவதாகவும் தெரிவித்தார்.

நிலை பேராண்மை அற்ற உற்பத்தி மற்றும் பயன்பாடு என்பனவற்றால் ஏற்பட்டுள்ள சுற்றாடல், சமூக, மற்றும் பொருளாதார பிரச்சினைகளை நாடுகள் எதிர்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.