ஊரடங்கு வேளையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கை

ஊரடங்கு வேளையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கை

கொவிட் 19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் காவற்துறையினரால் கையகப்படுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை - மீண்டும் அவற்றின் உரிமையாளர்களிடம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கான உரிய நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு அரசாங்கம் பதில் காவற்துறை மா அதிபர் சீ. டீ. விக்ரமரத்னவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.