ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை முகாம்

ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை முகாம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் 8ஆவது இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் இலவச மூக்குக் கண்ணாடி வழங்கல் கடந்த ஞாயிற்றுக்கிழமை (1) இறக்வானை  நடைபெற்றது.

பல்லின மக்களையும் ஒன்றிணைத்து நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வு, இறக்வான ஜும்ஆப் பள்ளிசாலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுமார் 500க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்துகொண்டு இலவச சேவையினை பெற்றுகொண்டனர். இது போன்ற நிகழ்வின் ஊடாக இதுவரை சுமார் 4,500க்கும் மேற்பட்ட பல்லின மக்களும் சேவையை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்று குழு உறுப்பினர்கள், சமயத் தலைவர்கள் எனப் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.