பிரதமரின் அலரி மாளிகை கூட்டம்; ரணில் அணி செல்லும், சஜித் அணி பங்குபற்றாது

பிரதமரின் அலரி மாளிகை கூட்டம்; ரணில் அணி செல்லும், சஜித் அணி பங்குபற்றாது

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கலந்துரையாடலில் பங்குபற்றுவதில்லை என சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் உறுப்பினர்களாக செயற்பட்டவர்களுடனான கலந்துரையாடலொன்று பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த அசாதாரன நிலை தொடர்பான இந்த கூட்டம் எதிர்வரும் மே 4ஆம் திகதி திங்கட்கிழமை அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கடந்த பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அணி இந்த கூட்டத்தில் கலந்துகொள்வது என தீர்மானித்துள்ள நிலையில் அதே கட்சியின் சஜித் பிரேமதாச தலைமையிலான அணி கலந்துகொள்வதில்லை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.