அரை மாத வாடகையினை வசூலிக்குமாறு வீட்டு உரிமையார்களிடம் அரசாங்கம் வேண்டுகோள்

 அரை மாத வாடகையினை வசூலிக்குமாறு வீட்டு  உரிமையார்களிடம் அரசாங்கம் வேண்டுகோள்

அரை மாத வாடகையினை வசூலிக்குமாறு வீடு மற்றும் கடைகளின் உரிமையார்களிடம் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் நேற்று (06) புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு மற்றும் புற நகர்களில் தங்கியிருந்து உயர் கல்வியினை தொடரும் மாணவர்கள் மற்றும் தொழில்வல்லுனர்களிடம் அரை மாத வாடகையினை வசூலிக்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வீடு மற்றும் கடைகளில் வாடகைக்கு வழங்கியிருப்பவர்களும் அரை மாத வாடகையினை வசூலிக்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.