கொரோனா வைரஸ்: செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு சனத் ஜயசூரியவினால் பாதுகாப்பு அங்கிகள் அன்பளிப்பு

கொரோனா வைரஸ்: செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு  சனத் ஜயசூரியவினால் பாதுகாப்பு அங்கிகள் அன்பளிப்பு

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு அவசியமான பாதுகாப்பு அங்கிகள் அண்மையில் அன்பளிப்பு செய்யப்பட்டன.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சனத் ஜயசூரியவினால் இலங்கை தொழில்சார் விளையாட்டு ஊடகவியலாளர் சங்கத்துடன் இணைந்து இந்த பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டன.

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்கள், புகைப்பட பிடிப்பாளர்கள் மற்றும் வீடியோ கிராபார் ஆகியோருக்கு இந்த பாதுகாப்பு அங்கிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

இந்த நிகழ்வு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் இடம்பெற்றது.