அரசியல் கைதிகளின் பெயர் விவரங்கள் பிரதமரிடம் கையளிப்பு

அரசியல் கைதிகளின் பெயர் விவரங்கள் பிரதமரிடம் கையளிப்பு

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் பெயர் விவரங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று (12) செவ்வாய்க்கிழமை கையளித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான சுமந்திரனிற்கும் இடையிலான பிரத்தியோக சந்திப்பொன்று இன்று கொழும்பு – 07, விஜயராம மாவத்தையிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது, வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையிலும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 47 பேர் உள்ளிட்ட 91 தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விவரங்கள் மற்றும் அவர்களின் வழக்குகள் தொடர்பான முழுத் தகவல்களையும் பிரதமரிடம் சுமந்திரன் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.