ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் கோப் குழுவிற்கு அழைப்பு

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் கோப் குழுவிற்கு அழைப்பு

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை பெப்ரவரி 11ஆம் திகதி அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழு முன்னிலையில் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்தக் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

இதேவேளை, பெப்ரவரி 12 ஆம் திகதி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கோப் குழுவுக்கு அழைக்கப்படவுள்ளதுடன், இலங்கையில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய விசேட கணக்காய்வு அறிக்கை பரிசீலிக்கப்படவுள்ளது.

கண்டி மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களை மீள் குடியேற்றும் வேலைத்திட்டத்தின் முன்னேற்ற பகுப்பாய்வு பெப்ரவரி 24ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கு பிளாஸ்டிக் இறக்குமதி செய்வதை முகாமை செய்தல் மற்றும் இலங்கையில் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை பெப்ரவரி 26 ஆம் திகதி பரிசீலிக்கப்படவுள்ளதாக  கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் மேலும் தெரிவித்தார்.