பள்ளிவாயல்களை மீளத் திறக்கும் விடயத்தில் பொறுமை காக்குமாறு கோரிக்கை

பள்ளிவாயல்களை மீளத் திறக்கும் விடயத்தில் பொறுமை காக்குமாறு கோரிக்கை

பள்ளிவாயல்களை மீளத் திறக்கும் விடயத்தில் பொறுமை காக்குமாறு கோரிக்கை வக்ப் சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து இலங்கை வாழ் முஸ்லிம்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் வக்ப் சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் பணிப்பாளரான ஏ.பி. எம். அஷ்ரப் இன்று (27) புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"மக்களது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலில்லாத வகையில் பள்ளிவாயல்கள் மீளத் திறப்பது பற்றி சுகாதார அமைச்சுடனும் கொவிட் 19 தொடர்பான ஜனாதிபதி செயலணியுடனும் இலங்கை வக்ப் சபை கலந்தாலோசித்து வருகிறது.

எனவே, வக்ப் சபையின உத்தியோக பூர்வமான அறிவிப்பு வரும் வரையில் இந்த விடயத்தில் பொறுமை காக்குமாறு பள்ளிவாயல் நிர்வாகங்களும் பொதுமக்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்" என்றார்.