‘அதிவேக நெடுஞ்சாலைகளில் ஓய்வெடுப்பதற்காக வாகனங்களை நிறுத்த முடியாது’

‘அதிவேக நெடுஞ்சாலைகளில் ஓய்வெடுப்பதற்காக வாகனங்களை நிறுத்த முடியாது’

"அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் உள்நுழைந்த பின்னர், அவ்வாகனங்கள் ஓய்வெடுப்பதற்காக நிறுத்த முடியாது. நித்திரைக் கலக்கம் அல்லது ஓய்வெடுப்பது போன்ற காரணங்களுக்காக வாகனங்களை நிறுத்துவதற்கு, சட்டத்தில் இடமில்லை" என பொலிஸார் தெரிவித்தனர்.

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதியொருவருக்குச் சோர்வு அல்லது நித்திரைக் கலக்கம் ஏற்பட்டால், வாகனங்களை நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மாத்திரம் நிறுத்த முடியுமென அதிவேக நெடுஞ்சாலைப் பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, ஜயந்த புஸ்பகுமார தெரிவித்தார்.

எனவே, சாரதிகள் இதனைப் புரிந்துச் செயற்படுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.