ஐக்கிய தேசிய கட்சியினை கட்டியொழுப்ப இளைஞர்கள் முன்வர வேண்டும்: ரணில்

ஐக்கிய தேசிய கட்சியினை கட்டியொழுப்ப இளைஞர்கள் முன்வர வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அது போன்று நாட்டிலுள்ள அரசியல் கலாசரத்தினை மாற்றுவதற்காக இளைஞர் சமுதாயம் முன்வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்த அடிப்படையில் பொதுமக்களின் கருத்தக்ககளை அறிந்து புது முகங்களை இந்த தேர்தலில் களமிறக்கியுள்ளதாக முன்னாள் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

பச்சை இரத்தம் எனும் இளைஞர் குழுவினரின் கூட்டமொன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.