சுதந்திர கட்சியுடன் கூட்டணி அமைக்க ஜேவிபி விருப்பம்

சுதந்திர கட்சியுடன் கூட்டணி அமைக்க ஜேவிபி விருப்பம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.

சுதந்திர கட்சி ஜேவிபியுடனும் பேச்சுவார்த்தை நடத்தும் என்று அதன் பொதுசெயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கூறி இருந்தார்.

இது தொடர்பாக உள்ளுர் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்திருக்கின்ற பிமல் ரத்நாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஆட்சேபனை இல்லை என்றால், அதன் உடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி அமைக்க ஜேவிபி தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.

ஜேவிபியின் சார்பில் அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்தமுறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.