திகாமடுல்லயில் தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம்: கபே

திகாமடுல்லயில் தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம்: கபே

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான வன்முறைகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளது என தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று (06) திங்கட்கிழமை அறிவித்தனர்.

இந்த மாவட்டத்தின் பொத்துவில், அக்கரைப்பற்று மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களிலேயே இந்த வன்முறைகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாக என கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.

இந்த பிரதேசங்களில் தேர்தல் பிரசாரங்கள் தற்போது தீவிரமாக நடைபெறுகின்ற நிலையில், சமூக ஊடகங்களிலும் வெறுப்பு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாகவே குறித்த மூன்று பிரதேசங்களிலும் தேர்தல் வன்முறைகள் அதிகம் இடம்பெறுவதற்கான வாய்ப்புள்ளது என மனாஸ் கூறினார்.

இதனால் குறித்த பிரதேசங்களின் பாதுகாப்பினை அதிகரிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றுக்கு கபே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.