தென் கிழக்கு பல்கலை மாணவன் வாகன விபத்தில் பலி

தென் கிழக்கு பல்கலை மாணவன் வாகன விபத்தில் பலி

திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசத்தில் நேற்று (24) புதன்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 24 வயதான தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மௌலவி, அல் ஹாபிழ் ஜே.அஹ்ஸன் உயிரிழந்துள்ளார்.

தோப்பூரிலிருந்து மூதூருக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது 64ஆம் கட்டைப் பகுதியில் வைத்து அம்பியுலன்ஸ் வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் இவர் வபாத்தாகியுள்ளார்.

தோப்பூரைச் சேர்ந்த அஷ்ஷெய்க் ஜவாஹிர் ஆசிரியரின் இரண்டாவது புதல்வரான ஜே. அஹ்ஸன் குர்ஆனை சுமந்த அல்ஹாபில், மௌலவி ஆகிய பட்டங்களை நிறைவு செய்தவராவார்.

அத்தோடு தென் கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் மூன்றாம் வருட மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-நயீம் புஹாரி-