மத்திய கிழக்கில் பணியாற்றும் 23 இலங்கையர்கள் கொரோனாவினால் உயிரிழப்பு

மத்திய கிழக்கில் பணியாற்றும் 23 இலங்கையர்கள் கொரோனாவினால் உயிரிழப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் 23 இலங்கையர்கள் கொவிட் - 19 நோய் காரணமாக கடந்து மூன்று மாத காலப் பகுதியில் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.

இதில் 14 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்திலும், ஏழு பேர் குவைதிலும் இருவர் ஓமானிலும் உயிரிழந்துள்ளதாக பணியகம் குறிப்பிட்டது.

இந்த புலம்பெயர் தொழிலாளர்களின் இறுதி கிரியைகள் குறித்த நாடுகளில் கொவிட் - 19 சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணக்கம் அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.