'சோபா' வின் மதிப்புமிக்க சர்வதேச விருதுகளை வென்ற இலங்கையின் இரு ஊடகவியலாளர்கள்

'சோபா' வின் மதிப்புமிக்க சர்வதேச விருதுகளை வென்ற இலங்கையின் இரு ஊடகவியலாளர்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து செய்தியறிக்கை அளித்தமைக்காக இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் இருவருக்கு ஆசியாவின் பதிப்பாளர் சங்கம் (Society of Publishers in Asia -  SOPA) மதிப்புமிக்க சர்வதேச விருதுகளை வழங்கியுள்ளது.

ஷிஹார் அனீஸ் மற்றும் ரங்க சிரிலால் ஆகிய இருவருமே இவ்வாறு சோபாவின் மதிப்புமிக்க சர்வதேச விருதுகளை வென்றுள்ளனர்.

இவர்கள் இருவரும் ஊடகவியலாளர்கள் குழுவுடன் சேர்ந்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரோய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு விரைவாக உண்மைத் தகவல்களை பகிர்ந்து கொண்டதில் சிறந்து விளங்கியதை அடிப்படையாகக் கொண்டே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.