குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு வேண்டுகோள்

குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு வேண்டுகோள்

குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் வரட்சியான சூழ்நிலை காரணமாக அடுத்த சில நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் நீர் விநியோகத்தில் தடைகள் ஏற்படலாம் எனவும் சபை அறிவித்துள்ளது.

இதனால் சிக்கனமாக நீரைப் பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.