பிரதமருக்கும் கிழக்கு ஆளுநருக்கும் இடையே சந்திப்பு

பிரதமருக்கும் கிழக்கு ஆளுநருக்கும் இடையே சந்திப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பதிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (02) புதன்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தின் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் ஆளுநரினால் இதன்போது பிரதமருக்கும் தெளிவுபடுத்தப்பட்டதுடன், கிழக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகளை விரைவுபடுத்துவதற்கு தேவையான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இயற்கை அழகு கொண்ட கிழக்கு மாகாணத்தில் சுற்றாடல் துறையை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ள தொல்பொருள் பாரம்பரியத்தை பாதுகாப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.