சட்டத்துக்கு வெளியே தண்டனை வழங்கிய பொலிஸார் பணியிலிருந்து இடைநிறுத்தம்

ஊரடங்கு சட்டம் அமுலிலிருந்த போது கொழும்பு – 10 டாலி வீதியில் பயணித்த நான்கு பேருக்கு எதிராக சட்டத்துக்கு வெளியே தண்டனை வழங்கிய பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.