இலங்கை அரசாங்கத்திற்கு பாக். பிரதமர் நன்றி தெரிவிப்பு

இலங்கை அரசாங்கத்திற்கு பாக். பிரதமர் நன்றி தெரிவிப்பு

கொரோனா தொற்றால் உயிரிழப்போரை நல்லடக்கம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கி உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுத்தமைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த அறிவிப்பினை அவர் வரவேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் அவர், டுவிட்டர் பதிவோன்றை பதிவேற்றியுள்ளார்.