வட மாகாண ஆளுநர் - யாழ். இந்தியத் துணைத் தூதுவர் சந்திப்பு

வட மாகாண ஆளுநர் - யாழ். இந்தியத் துணைத் தூதுவர் சந்திப்பு

வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸிற்கும் யாழ்ப்பாணத்திலுள்ள  இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (28) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இந்திய திட்டங்கள் மற்றும் வட மாகாணத்தில் இந்திய வளர்ச்சி ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறிப்பாக  போக்குவரத்து, கமநலம், சுகாதாரம் மற்றும் வீட்டுத் துறை தொடர்பான விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.