'கல்முனை பிராந்தியத்தில் 129 பேர் சுய தனிமைப்படுத்தல்'

கல்முனை சுகாதார மாவட்டத்தில் 129 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

எமது பிராந்தியத்தில் கொரேனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒன்பது பேர் அடையாளம் காணப்பட்டதினை அடுத்தே இந்த சுய தனிமைப்படுத்தல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலதிக சிகிச்சைகளுக்காக இவர்கள் கரடியணாறு கொவிட் வைத்தியசாலை மாற்றப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (24) சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.