வைத்தியர் ஷாபிக்கு எதிரான விசாரணை ஜனவரி 16 வரை ஒத்திவைப்பு

வைத்தியர் ஷாபிக்கு எதிரான விசாரணை ஜனவரி 16 வரை ஒத்திவைப்பு

குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிரான மனு விசாரணை ஜனவரி 16 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வைத்தியர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான மனு விசாரணை இன்று (12) வியாழக்கிழமை குருநாகல் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.

குறித்த மனு மீதான விசாரணைகளை முன்னெடுத்திருந்த குற்றப்புலனாய்வு பிரிவின் உயர் அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளனர்.

இதனால் இந்த விசாரணைகளை மேற்கொள்ள உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நீதவானின் கவனத்திற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் கொண்டு சென்றனர்.

இதனையடுத்து மீண்டுமொரு தடவை வைத்தியர் ஷாபியிடம் வாக்குமூலம் பெறுமாறும் தெரிவித்து இந்த மனு மீதான விசாரணைகளை ஜனவரி 16 வரை நீதவான் ஒத்திவைத்தார்.