மார்ச் 3 வரை ஹிஜாஸ் விளக்கமறியல்

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் இன்று (18) வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

கடந்த 10 மாதங்களுக்கு மேலாக குற்றப்புலனாய்வு பிரிவினரால் இவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில்  சட்டத்தரணி ஹிஜாஸுடன் தொடர்புடைய மத்ரஸாவொன்றின் அதிபர் நேற்று (17) புதன்கிழமை சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையிலேயே இவர்கள் இருவரும் இன்று மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போதே இவர்களை மார்ச் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.