றிசாத் பதியுதீனை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

றிசாத் பதியுதீனை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பினை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மேற்கொண்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோர் இன்று அதிகாலை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.