இலங்கையிலிருந்து செல்லும் பயணிகள் UAEற்குள் பிரவேசிக்க முடியும்

இலங்கையிலிருந்து செல்லும் பயணிகள் UAEற்குள் பிரவேசிக்க முடியும்

இலங்கை உட்பட ஆறு நாடுகளிலிருந்து செல்லும் பயணிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் (UAE) பிரவேசிக்க விதிப்பட்டிருந்த தற்காலிகத் தடை இன்று (03) செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கடந்த மே 10ஆம் திகதி முதல் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், நைஜீரியா மற்றும் உகண்டா ஆகிய நாடுகளிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நிபந்தனைகளுடன் குறித்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொவிட் - 19 எதிரான இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றியவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி வியாழக்கிழமை முதல் அனுமதிக்கப்படுவர்.

அத்துடன் கொவிட் - 19 எதிரான இரண்டாவது தடுப்பூசி ஏற்றி 14 நாட்களுக்கு பின்னரே குறித்த ஆறு நாடுகளிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.