'யாழ். பல்கலையில் நினைவுத் தூபி இடிப்பிற்கும் அரசாங்கத்திற்கும் எந்த தொடர்புமில்லை'

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கும் அரசாங்கத்திற்கும் எந்த தொடர்புமில்லை என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இந்த நினைவுத் தூபியை அகற்றுவது  தொடர்பில் அரசாங்கம் எந்தவித தீர்மானத்தினையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த தூபியினை அகற்றும் தீர்மானத்தினையும் பின்னர் அதை நிர்மாணிக்கும் தீர்மானத்தையும் பல்கலைக்கழக நிர்வாகமே மேற்கொண்டது என அவர் மேலும் கூறினார்.  

தகவல் திணைக்களத்தில் இன்று (12) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.