துறைமுக நகர் சட்ட மூலத்திற்கு எதிர்த்து வாக்களிக்க மக்கள் காங்கிரஸ் தீர்மானம்

துறைமுக நகர் சட்ட மூலத்திற்கு எதிர்த்து வாக்களிக்க மக்கள் காங்கிரஸ் தீர்மானம்

விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள துறைமுக நகர் சட்ட மூலத்திற்கு எதிராக கட்சியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

கட்சியின் அரசியல் உயர் பீடம் கடந்த செவ்வாய்க்கிழமை (04) கொழும்பில் கூடிய போதே  பதில் தலைவர் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

20ஆவது திருத்தச் சட்ட மூல வாக்கெடுப்பின் போது கட்சி உறுப்பினர்கள் ஆதரவாகவும், எதிராகவும் வாக்களித்து போன்றல்லாமல் இந்த வாக்கெடுப்பின் போது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக எதிர்த்து வாக்களித்து துறைமுக நகர் சட்ட மூலத்தினை தோற்கடிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

கட்சியின் இந்த தீர்மானத்தினை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக ஒழுகாற்று நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 20ஆவது திருத்தச் சட்டத்தில் ஆதரவாக வாக்களித்த கட்சியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தங்களின் விளக்கங்களை தனித் தனியாக எழுத்து மூலம் வழங்குமாறும் கட்சியின் அரசியல் உயர் பீடம் உத்தரவிட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான், அலி சப்ரி றஹீம் மற்றும் எம்.எம்.முஷாரப் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.