Face Mask அணியாமல் நடமாடியோருக்குத் நீதிமன்றத்தினால் தண்டம் விதிப்பு

Face Mask அணியாமல்  நடமாடியோருக்குத் நீதிமன்றத்தினால் தண்டம் விதிப்பு

பொது இடங்களில் முகக்கவசம் (Face Mask) அணியாமல் நடமாடியவர்களுக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தால் தலா ஆயிரம் ரூபா வீதம் தண்டம் விதிக்கப்பட்டது.

கடந்த புதன்கிழமை மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளதாக அறிந்ததும் முகத்திரை அணியாமல் வீதியில் ஓடி வந்தவர்கள் உட்பட பலருக்கு எதிராக சாவகச்சேரி பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்குகள் நேற்று முன் தினம் (14) வியாழக்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது முகக்கவசம் இல்லாமல் நடமாடியவர்களுக்கு தலா ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

மக்களை கொரோனாத் தொற்றிலிருந்து பாதுகாக்கவே முகத்திரை அணிய வேண்டுமென  வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இது தெரிந்தும் அதனை உதாசீனம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என நீதவானினால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

நன்றி: சுடர் ஒளி