RTI ஆணைக்குழுவின் விசாரணைகளை கொழும்பிற்கு வெளியேயும் முன்னெடுக்க நடடிக்கை

RTI ஆணைக்குழுவின் விசாரணைகளை கொழும்பிற்கு வெளியேயும் முன்னெடுக்க நடடிக்கை

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேன் முறையீடுகளை கொழும்பு மாவட்டத்திற்கு வெளியேயும் விசாரிப்பதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் மேன் முறையீட்டு மனுக்களின் விசாரணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.

எனினும், தற்போது கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை பரிசீலித்ததன் பின்னர், கொழும்பிற்கு வெளியே உள்ள பகுதிகளிலும் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அண்மையில் யாழ். மாவட்டத்தில் மேன் முறையீட்டு விசாரணைகள் இடம்பெற்றன. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்தி அடுத்த சில வாரங்களில் மற்றுமொரு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் ஆணைக்குழு தெரிவித்தது.

இதேவேளை, தகவல்களை வழங்காத அரச நிறுவனங்களுக்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதுவரை கிடைக்கப்பெற்ற மேன் முறையீடுகளில் பெரும்பாலானவை பிரதேச செயலகங்கள், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் உள்ள நிறுவனங்களில் இருந்து பெறப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்தது.

மேலும், அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு எதிராகவும்  கணிசமான எண்ணிக்கையிலான மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.