டுபாய் சங்கமம் தொலைக்காட்சி ஸ்தாகபர் கலையன்பன் ரபீக் காலமானார்

டுபாய் சங்கமம் தொலைக்காட்சி ஸ்தாகபர் கலையன்பன் ரபீக் காலமானார்

டுபாய் சங்கமம் தொலைக்காட்சியின் ஸ்தாகபரான கலையன்பன் ரபீக், இன்று (19) திங்கட்கிழமை காலமானார்.

கொழும்பினை பிறப்பிடமாகக் கொண்ட இவர் 1980ஆம் ஆண்டுகளில் தினகரன் பத்திரிகையின் தெமடகொட செய்தியாளராக இணைந்துகொண்டார். பின்னர், டுபாயின் சென்று சொந்தமாக ஒரு தொலைக்காட்சி நிறுவனமொன்றினை நிறுவி கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நடத்தி வந்திருந்தார்.

அரபு மண்ணின் அமீரகத்தில் முதன் முதலில் சங்கமம் வானொலியை தொடங்கியவர் இவரே. அதிலிருந்து சங்கமம் என்ற கலைக்குழுவை உருவாக்கி பலர் பேச்சு, பாடல், ஆடல்இ நடிப்பு என பல திறமைகளை வளர்த்துக்கொள்ள களம் அமைத்து ஊக்கப்படுத்தி பின்புலமாக இருந்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல சவால்களின் மத்தியிலும் சிரித்த முகத்துடன் ஊடக மற்றும் கலைத்துறையை கைவிடாதவர். டுபாயில் கலைத்திறமை மிக்கவர்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கு களமமைத்துக் கொடுக்க இவர் முயன்றுகொண்டேயிருந்தமை குறிப்பிடத்தக்கது.