பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் சுக்ரா முனவருக்கு புலமைப்பரிசில்

பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் சுக்ரா முனவருக்கு புலமைப்பரிசில்

சிரச தொலைக்காட்சியின் லக்ஷாதிபதி வெற்றியாளரான காலியைச் சேர்ந்த சுக்ரா முனவருக்கு இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் புலமைப்பரிசிலொன்று வழங்கப்பட்டுள்ளது.

சுக்ரா முனவரின் எதிர்கால இலட்சியமான பிரதம நிறைவேற்று அதிகாரியாக வரும் நோக்கிலேயே இந்த புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பிலுள்ள இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தில் இன்று (27) புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே இந்த புலமைப்பரிசில் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் தலைவர் மனில ஜயசிங்க, சபை உறுப்பினர் திருமதி ஷாமிலா குரே மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி திருமதி துலானி பெர்னாண்டோ ஆகியோர்  கலந்துகொண்டனர்.