குமார வெல்கம ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு

குமார வெல்கம ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு

நவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டார்.

இதனையடுத்து அக்கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவராக அக்கட்சியின் தலைவரான சஜித் பிரேமதாசவினால் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான குமார வெல்கம, அக்கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு பாராளுமன்றம் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.