ஊடகவியலாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்காக தகவல்களை சேகரிக்கும் கால எல்லை நீடிப்பு

ஊடகவியலாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்காக தகவல்களை சேகரிக்கும் கால எல்லை நீடிப்பு

'நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' தேசிய கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்படும் வெகுசன ஊடகக் கொள்கையின்படி, வெகுசன ஊடகவியலாளர்களுக்கு சலுகைகளை வழங்கும் நோக்கில், வெகுசன ஊடக அமைச்சினால் நாடெங்கிலும் உள்ள அனைத்து வெகுசன ஊடகவியலாளர்களினதும் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றது.

இத் திட்டத்தின் கீழ் பல ஊடகவியலாளர்கள் ஏற்கனவே தங்கள் தகவல்களை வெகுசன ஊடக அமைச்சுக்கு சமர்ப்பித்துள்ளனர். இதுவரை சமர்ப்பிக்காதோர், விண்ணப்பப்படிவத்தை அமைச்சின் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் அல்லது அமைச்சுக்கு வருகை தருவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

மேற்படி பூர்த்தி செய்த படிவத்தை, 2020 செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன், 'பணிப்பாளர் (ஊடகம்), தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, இல. 163, 'எசிதிசி மெதுர', கிருலப்பன மாவத்தை, பொல்ஹென்கொட, கொழும்பு 05' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

விண்ணப்பப்படிவம்:

மேலதிக விபரங்களுக்கு: 0112513645