முஸ்லிம் வர்த்தகரின் சடலம் எரிந்த நிலையில் காரிலிருந்து மீட்பு

முஸ்லிம் வர்த்தகரொருவரின் சடலம் எரிந்த நிலையில் காரிலிருந்து நேற்றிரவு 11.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொஹுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுபோவில ஆசிரி மாவத்தை பகுதியிலிருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வெகன்-ஆர் ரக காரொன்றில் இருந்தே குறித்த வர்த்தகரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரித்தார்.

குறித்த கார் முழுவதுமாக தீக்கிரையாகியிருந்ததாகவும், மற்றும் உயிரிழந்த நபரின் சடலமும் எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதில் உயிரிழந்தவர் 33 வயதுடைய நஸ்பான் நசார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  கொஹுவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.