துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் சபாநாயகரினால் சான்றுரைப்படுத்தல்

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் சபாநாயகரினால் சான்றுரைப்படுத்தல்

பாராளுமன்றத்தில் கடந்த மே 20ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப் படுத்தினார்.

இன்று (27) முற்பகல் 11.30 மணிக்கு சபாநாயகர் தனது சான்றுரைப்படுத்தலை வழங்கியிருப்பதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்தது. இதற்கமைய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டம் இன்று முதல் (27) நடைமுறைக்கு வரும்.