மாஸ்க் அணியாமல் wheel barrow இல் பொருட் கொள்வனவு: கைது செய்யப்பட்டவர் பிணையில் விடுதலை

மாஸ்க் அணியாமல் wheel barrow இல் பொருட் கொள்வனவு: கைது செய்யப்பட்டவர் பிணையில் விடுதலை

மாஸ்க் அணியாமல் wheel barrow இல் பொருட் கொள்வனவு செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நேற்று (25) செவ்வாய்க்கிழமை தர்கா நகர் பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட நபர், இன்று (26) புதன்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டின் கீழ் அளுத்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இவர், களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் காலப் பகுதியில் பொருட் கொள்வனவிற்காக அருகிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு வீட்டிலுள்ள ஒருவர் மாத்திரம் அனுமதிக்கப்படுவார் என அரசாங்கம் கடந்த திங்கட்கிழமை அறிவித்தது.

இந்த நிலையில், குறிப்பிட்ட நபர் மாஸ்க் அணியாமல் wheel barrow இல் பொருட் கொள்வனவு செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியமை குறிப்பிடத்தக்கது.

மாஸ்கின்றி wheel barrow இல் பொருட் கொள்வனவு செய்தவர் கைது