சமித தேரர்: பலஸ்தீனத்திற்காக வாழ்க்கை அர்ப்பணித்தவர்: தூதரகம்

சமித தேரர்: பலஸ்தீனத்திற்காக வாழ்க்கை அர்ப்பணித்தவர்: தூதரகம்

பலஸ்தீனத்திற்காகவும்,  அந்நாட்டு மக்களுக்காகவும் காலஞ்சென்ற சமித தேரர் தனது வாழ்க்கையின் அர்ப்பணித்து பணியாற்றினார் என கொழும்பிலுள்ள பலஸ்தீன் தூதுவராலயம் தெரிவித்தது.

பலஸ்தீனத்தின் சிறந்த நண்பனான இவரின் மறைவு தொடர்பில் மிகவும் கவலையடைவதாகவும் தூதரகம் குறிப்பிட்டது.

சமித தேரர் மறைவு தொடர்பில் கொழும்பிலுள்ள பலஸ்தீன் தூதுவராலயத்தின் பொறுப்பாளர் ஹிசாம் அபூ தாஹா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.