இனவாத தாக்குதலினால் கொல்லப்பட்ட கொட்டராமுல்லை பௌசுல் அமீனின் மனைவி காலமானார்

இனவாத தாக்குதலினால் கொல்லப்பட்ட கொட்டராமுல்லை பௌசுல் அமீனின் மனைவி காலமானார்

புத்தளம் - நாத்தாண்டிய, கொட்டராமுல்லை பகுதியில் கடந்த ஆண்டு இடம்பெற்ற இனவாத தாக்குதலின் போது கொல்லப்பட்ட பௌசுல் அமீனின் மனைவி இன்று (01) வெள்ளிக்கிழமை காலமானார்

நான்கு பிள்ளைகளின் தாயான இவர், தனது கணவனின் மறைவினால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக நீண்ட நாட்களாக சுகயீனமடைந்திருந்தார். இந்த நிலையிலேயே இன்று அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்றிரவு கொட்டராமுல்லை பிரதேச முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த 2019 மே 13ஆம் திகதி இனவாதிகளினால் கொட்டராமுல்லை பிரதேசத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.