இலங்கைத் தமிழர்களுக்கும் தமிழ் நாட்டில் கொரோனா நிவாரண நிதி

இலங்கைத் தமிழர்களுக்கும் தமிழ் நாட்டில் கொரோனா நிவாரண நிதி

தமிழ்நாட்டில் முகாம்களுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழ் குடும்பங்களுக்கு தமிழ் நாட்டு அரசாங்கத்தினால் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படுகின்றது.

இதற்கமைய, 13,553 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு தலா 4,000 இந்திய ரூபா கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்படுகின்றனது.

இந்த திட்டத்தைத் தமிழக முதல்வர் எம்.கே. ஸ்தாலின் தலைமைச் செயலகத்தில் இன்று (19) சனிக்கிழமை ஆரம்பித்துவைத்தார்.

"அனைத்துத் தரப்பு மக்களையும் ஒரு தாய் மக்களென அரவணைத்துத் தி.மு.க. அரசு காக்கும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.