'ஒரே நாடு, ஒரே சட்டம்' எனும் வாக்குறுதியை இவ்வருட இறுதிக்குள் நிறைவேற்றுவேன்: ஜனாதிபதி

'ஒரே நாடு, ஒரே சட்டம்' எனும் வாக்குறுதியை இவ்வருட இறுதிக்குள் நிறைவேற்றுவேன்: ஜனாதிபதி

'ஒரே நாடு, ஒரே சட்டம்' எனும் வாக்குறுதியை இவ்வருட இறுதிக்குள் நிறைவேற்றுவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

ருவன்வெலிசாயவை வழிபட ஜனாதிபதி சென்றிருந்தார். அங்கு அவர் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருக்கும் போது - இளம் வயது பிக்கு ஒருவரைச் சந்தித்தார்.

அப்போது குறித்த இளம் பிக்கு ஜனாதிபதியிடம்  "ஒரே நாடு, ஒரே சட்டத்தை உருவாக்குவதாகக் கூறினீர்களே. அதனை நாம் மிகவும் எதிர்பார்த்திருக்கிறோம்" என்றார்.

"இந்த வருட இறுதிக்குள் அந்த வாக்குறுதியை நான் நிறைவேற்றுவேன். அத்தோடு - அன்று நான் உறுதியளித்தவாறு, புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கும், அடுத்த வருடத்துக்குள் நடவடிக்கை எடுப்பேன்.

மக்களின் எதிர்பார்ப்புக்கமைய, புதிய தேர்தல் முறைமையொன்றையும் அடுத்த வருடத்துக்குள் உருவாக்குவேன்" என ஜனாதிபதி பதிலளித்தார்.