குவைத் முதலீட்டாளர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை: தூதுவர்

குவைத் முதலீட்டாளர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை: தூதுவர்

குவைத் முதலீட்டாளர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கைக்கான குவைத் தூதுவர் ஹல்லாப் பூ தைர் தெரிவித்தார்.

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிற்கும் குவைத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (27) செவ்வாய்க்கிழமை நிதி அமைச்சில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போதே குவைத் தூதுவர் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், பிரித்தானியாவின் லண்டனில் உள்ள குவைத் வணிக முதலீட்டு அலுவலகம் மூலம் முதலீட்டாளர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுப்பதாக தூதுவர் இதன்போது தெரிவித்தார்.

தெற்காசியாவில் ஒரு வர்த்தக மையமாக உருவெடுக்க இலங்கைக்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கும் குவைத் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அவர் உறுதியளித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் புதிய பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து குவைத்து முதலீட்டாளர்களுக்கு தெளிவுபடுத்துவதாகவும் தூதுவர் குறி;ப்பிட்டார்.