தனது பெயரில் பொய் தகவல்கள் பரப்பப்படுகின்றன: ஜனாதிபதி

தனது பெயரில் பொய் தகவல்கள் பரப்பப்படுகின்றன: ஜனாதிபதி

நாட்டின் தற்போதைய அவசரகால நிலையில் பொய்யான பல தகவல்கள் பரப்பப்டுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது,

"நாட்டின் தற்போதைய அவசரகால நிலையில் - பொய்யான பல தகவல்கள், தன்னால் கூறப்பட்டவை என, பல்வேறுபட்ட இணையத் தளங்கள், தொலைபேசித் தகவல்கள் மற்றும் சமூக ஊடகங்களின் மூலம் பரப்பப்படுகின்றன.

இவை தவறான கருத்துக்களையே உருவாக்கக்கூடும் என்பதனால் - எனது அதிகாரபூர்வ அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் என்பன எனது அதிகாரப்பூர்வ இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடக பக்கங்கள் மூலமாக மட்டுமே பகிரப்படும் என்பதனை உங்களுக்கு அறியத் தருகின்றேன்" என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.