அகதிகளாக வெளிநாடு சென்றவர்கள் நாடு திரும்பலாம்: நாமல்

 அகதிகளாக வெளிநாடு சென்றவர்கள் நாடு திரும்பலாம்: நாமல்

யுத்தக் காலத்தில் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றவர்கள் நாடு திரும்புவதை வரவேற்பதாக அரசாங்கம் இன்று (28) சனிக்கிழமை அறிவித்தது.

இது தொடர்பான அறிவிப்பினை விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் மேற்கொண்டார்.

இலங்கை அகதிகளுக்கு தமிழக முதலமைச்சர் எம்.கே ஸ்டாலின் நேற்று (27) வெள்ளிக்கிழமை சிறப்புரிமைகளை அறிவித்திருந்தர். இந்த நிலையிலேயே  அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இந்த அறிவிப்பினை மேற்கொண்டதுடன்  

இலங்கைக்கு மீளத் திரும்பும் அகதிகளின் பாதுகாப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் உறுதி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தாய் நாட்டில் தமது வாழ்க்கையினை மீள ஆரம்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்

இதேவேளை, 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், இலங்கை அகதிகள் குறித்து தமிழக முதல்வர் அவதானம் செலுத்தியதை  வரவேற்பதாகவும் அமைச்சர் நாமல் குறிப்பிட்டார்.

தமிழகத்திற்கு அகதிகளாக சென்ற 3,567 குடும்பங்களை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவையுடன் இணைந்து நாட்டிற்கு மீள அழைத்து வந்து, அவர்களுக்கு தேவையான வீடுகளை வழங்கியிருந்தமையினையும் குறித்த டுவிட்டரில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

While welcoming #TamilNadu CM. @mkstalin's statement on #lka refugees, after the end of the war in 2009, then govt of @PresRajapaksa welcomed back refugees who had fled to TN. According to stats, 3,567 families hv returned back to #lka with the help of UNHRC facilitation 1/2

— Namal Rajapaksa (@RajapaksaNamal) August 28, 2021